புதன், 15 ஜூலை, 2015

உன் செயலில் நீ கவனம் செலுத்து..



கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..
அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,
அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.
இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு.
அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன. 
மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.
மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.

மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.
என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈயுமா?
மகவும் பிழைக்குமா?
இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?
வேடனின் அம்புக்கு இரையாகுமா?
புலியின் பசிக்கு புசியாகுமா?
மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?
மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.
அப்போது நடந்த நிகழ்வுகள்.......
மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.
எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது.
தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது..
அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது.
நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்..
சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்..
நாம் இம்மானிடம் இருந்து மானிடம் கற்றுக்கொள்வோம்..
அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும்.
இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..
எதில் என் கவனம்?
எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்?
வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்..
அவர் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டார்.
கடவுள் தூங்குவதும் இல்லை..
துயரப்படுத்துபவரும் இல்லை.. உன் செயலில் நீ கவனம் செலுத்து..
மற்றவை நடந்தே தீரும்..

செவ்வாய், 23 ஜூன், 2015

பணம் சேர


பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற
 வேண்டிய ஆன்மீக விதிகள்!!!

1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது

 கையால் கொடுக்க சொல்லி வலது கையால்

 வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் 
கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.


2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது
 தொழில் சம்பந்தமான பைல், புத்தகம்,
 நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு
 என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக
 ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் 
செய்யவே கூடாது.இது தரித்திரத்தை
 உண்டாக்கும்.

3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில்
 (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத்
 துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல்
 பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ
 அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .

4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது
 சட்டைப்பையில் பணம் இல்லாமல் 
செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் 
பணத்தை ஈர்க்கும்.

5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி 
வைத்திருக்கும் அறைச் சுவர் மஞ்சள் அல்லது 



மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை 



அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் 



பணவரவைக் குறைக்கும்.

6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் 
பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் 
பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார 
வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் 
பராமரிக்கப்படவேண்டும்.

8.கடை அல்லது அலுவலகத்திற்கு "ஓம் ஸ்ரீம் 
ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம 
மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற 
மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி 
அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க 
வேண்டும்.இல்லை என்றால் 
பணப்பெட்டிக்காவது தினமும் ஊதுவத்தி 
அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க 
வேண்டும்.

9.வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 
7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் 
தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு 
மேற்கு நோக்கி அமர்ந்து "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் 
ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட 
திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து 
அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது 
அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும். 
வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு 
இவற்றில் தெளிக்கவும்.

வெள்ளி, 9 ஜனவரி, 2015

வணிகர்

வணிகம் புரிபவர்கள் , நிரந்தர மாத ஊதியம் பெறும் பணியாளர்கள் என
இரு வகைப்படும் மனிதர்களில்
வணிகர் – என்ற தலைப்பில் வருபவர்களுக்கு அடிப்படை தேவை சில எண்ண
உறுதிப்பாடுகள் (MINDSETS)


1. கடின உழைப்பு ..இதுவே விலை மதிப்பில்லா அனுபவம் தரும்

2. நாணயம் மற்றும் வெளிப்படையான தன்மை இதுவே LONGRUN ல்சீரான
வணிகம் தரும்
3. பொறுப்புகளை விருப்பத்துடன் முழுவதுமாக ஏற்று கொள்ளும் மனப்பாங்கு
சான்றாக நீங்கள் சிமெண்ட் விற்பனையாளர்
என்று கொண்டால் நீங்கள் விற்கும் சரக்கை அவர் இடத்தில் மழை வெய்யி ல் –இருந்து பாதுகாப்பாக STORE செய்து கொடுப்பது
4. வாடிக்கையாளர் நோக்கு என்ன என்று முழுமையாக தெரிந்து உங்கள் வணிகம் உங்கள் பொருளை /சேவையை
விற்பதாக இல்லாது வாடிக்கையாளர் முழுமையான திருப்தி யை நோக்கி இருக்க வேண்டும்
5. தொழிலில் UPS AND
DOWNS இயல்பாக இருக்கும் தாழ்நிலை போது அதை எதிர்கொள்ளும் WITH STANDING ஆண்மை
6. EGO இல்லாது இருத்தல் பணிவு வணிகத்தில் எப்போதும்
அவசியம்
7. WHEN YOU ARE PARTY TO PROFIT ...YOU ARE PARTY TO LOSS
...நட்டமும் வணிகத்தில் வரும் அதை ஏற்று க் கொண்டு அதில் இருந்தது மீண்டு வருதல் என்ற மனப்பாங்கு
கொள்தல்
8. செலவு நடைமுறையை எப்படி குறைப்பது என்ற மனப்பாங்கு
கொள்தல்
9. வாடிக்கையாளர் திருப்தி மேலோங்க எளிய வழிமுறைகளை தேடி
உணர்ந்து கையாளுதல் ..சான்றாக நீங்கள் ஒரு பொருள் விற்பதாக வைத்து கொள்ளுவோம்
அதற்காக PACKING MATERIAL வைத்து இருப்பீர்கள் அல்லவா ? அது கூட வாடிக்கையாளர்களுக்கு
MULTI-REPEATED USE CONTAINER போல் அமைய வேண்டும் வாடிக்கையாளர் மகிழ்வே
தொடர் வணிகமாக அமையும்
1 0 தொழில் பற்றிய புரிதல் ...அதிகபட்ச விபரம் தெரிந்து வைத்து
வாடிக்கையாளருக்கு உதவுதல்
1 1 முதல் போடுதல் CAPITAL எல்லாம் இந்த உளவியல்தன்மையை இயல்பாக கைக்கொள்ளும்
உறுதி வந்த பின்னர்தான்

ஞாயிறு, 30 நவம்பர், 2014

மனதைத் தொட்ட பழமொழிகள்

மனதைத் தொட்ட வரிகள்
1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.
2. துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.

3. உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.
4. ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.
5. பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்.
6. அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. (யாருங்க அது
7. பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!!!!!
8. ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
9. நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
10. தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
11. குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்
12. சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்
13. வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.
14. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
15. மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது. நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!
16. அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!
17. செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!
18. நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!
19. பறக்க விரும்புபவனால் படர முடியாது.
20. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
21. ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.