
பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற
வேண்டிய ஆன்மீக விதிகள்!!!
1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது
கையால் கொடுக்க சொல்லி வலது கையால்
வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக்
கையால் கொடுக்க சொல்லி வலது கையால்
வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக்
கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.
2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது
தொழில் சம்பந்தமான பைல், புத்தகம்,
நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு
என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக
ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச்
செய்யவே கூடாது.இது தரித்திரத்தை
உண்டாக்கும்.
3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில்
(EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத்
துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல்
பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ
அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .
4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது
சட்டைப்பையில் பணம் இல்லாமல்
செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான்
பணத்தை ஈர்க்கும்.
5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி
வைத்திருக்கும் அறைச் சுவர் மஞ்சள் அல்லது
மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை
அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள்
பணவரவைக் குறைக்கும்.
6.பணப்பெட்டியில் பணம் வைக்கும்
பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும்
பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார
வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.
7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப்
பராமரிக்கப்படவேண்டும்.
8.கடை அல்லது அலுவலகத்திற்கு "ஓம் ஸ்ரீம்
ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம
மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற
மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி
அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க
வேண்டும்.இல்லை என்றால்
பணப்பெட்டிக்காவது தினமும் ஊதுவத்தி
அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க
வேண்டும்.
9.வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல்
7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம்
தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு
மேற்கு நோக்கி அமர்ந்து "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட
திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து
அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது
அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும்.
வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு
இவற்றில் தெளிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக